கட்டளைகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்தில் 2025 ஜூன் 14 அன்று கட்டளைகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டித் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் மேற்கு கடற்படை கட்டளை ஆண்கள் சாம்பியன்ஷிப்பையும், வட மத்திய கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பையும் வென்றது.

15 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஆண்கள் பிரிவில் கயிறு இழுக்கும் போட்டித் தொடரில் இறுதிப் போட்டி மேற்கு கடற்படை கட்டளைக்கும் வடக்கு கடற்படை கட்டளைக்கும் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கு கடற்படைக் கட்டளை வெற்றி பெற்றது. பெண்களுக்கான கயிறு இழுத்தல் இறுதிப் போட்டித்தொடரில் பயிற்சி கட்டளைக்கும் வட மத்திய கடற்படை கட்டளைக்கும் இடையே நடைபெற்றதுடன், இதில் வட மத்திய கடற்படை கட்டளை வெற்றி பெற்றது.

மேலும், வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் இந்திகா டி சில்வா மற்றும் கடற்படை கயிறு இழுத்தல் கழகத்தின் தலைவர் கொமடோர் ஏ.எம்.டி. அமரகோன் உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.