இலங்கையின் சர்வதேச நடைமுறை துப்பாக்கிச் சூடு கூட்டமைப்பு (International Practical Shooting Confederation - IPSC) ஏற்பாடு செய்த Pistol Caliber Carbine (PCC) மற்றும் Handgun Level III தேசிய துப்பாக்கிச் சூடு போட்டி, 2025 ஜூன் 18 முதல் 22 வரை வெலிசர கடற்படை கைத்துப்பாக்கிச் சூட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. விருது வழங்கும் விழா 2025 ஜூன் 22 ஆம் திகதி Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் கௌரவ பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.