கட்டளைகளுக்கு இடையேயான ஸ்கோஷ் சாம்பியன்ஷிப் - 2025 திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஸ்கோஷ் போட்டித் தொடர் 2025 செப்டம்பர் 02 முதல் 05 வரை திருகோணமலை கடற்படை கப்பல் துறை ஸ்கோஷ் மைதானத்தில் நடைபெற்றதுடன், இதில் மேற்கு கடற்படை கட்டளை சாம்பியன்ஷிப்பை ஆண்கள் வென்றதுடன் வட மத்திய கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றனர்.

அதன்படி, கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஸ்கோஷ் போட்டித் தொடரில், ஆண்கள் புதிய பிரிவில் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் லெப்டினன்ட் கமாண்டர் டபிள்யூ.டி.டி.டபிள்யூ வதுதந்திரியினாலும் இரண்டாம் இடத்தைப் பயிற்சி கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் லெப்டினன்ட் கமாண்டர் டி சொய்சாவினால் பெறப்பட்டதுடன், பெண்கள் புதிய பிரிவில் சாம்பியன்ஷிப்பை பயிற்சி கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் மாலுமி கே.ஜி.கே.வி ரணவீர வென்றதுடன், இரண்டாம் இடத்தை மேற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் மாலுமி எச்.பி.ஏ பியுமாலியும் பெற்றுக் கொண்டார்.

35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பிரிவில் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை வீரரான (உடல் பயிற்சியாளர்) எச்.எம்.ஏ பிரியந்த வென்றதுடன், இரண்டாம் இடத்தை கட்டளையின் முன்னணி உடல் பயிற்சியாளர் டபிள்யூ.எம்.ஏ.டி திசாநாயக்க வென்றார். ஆண்களுக்கான 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை வீரரான (உடல் பயிற்சியாளர்) டபிள்யூ.ஜி.டி பிரியதர்ஷன வென்றதுடன், இரண்டாம் இடத்தை வட மத்திய கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் கமாண்டர் பிஆர்பிடி தயாரத்ன வென்றார்.

இந்தப் போட்டியில் ஆண்கள் திறந்த பிரிவில் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை வீரரான (உடல் பயிற்சியாளர்) எச்.எம்.ஏ. பிரியந்த வென்றதுடன், இரண்டாம் இடத்தை அதே கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை வீரர் டபிள்யூ.எம்.ஏ.டி. திசாநாயக்க வென்றார். மகளிர் திறந்த சாம்பியன்ஷிப்பை வட மத்திய கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் மாலுமி எச்.எம்.எஸ்.ஓ.பி ஹேரத் வென்றதுடன், இரண்டாம் இடத்தை மேற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் மாலுமி எச்.ஜி.என்.வி. ராஜபக்ஷவும் பெற்றுக் கொண்டனர்.

மேலும், திறந்த வெலி 01 பிரிவு சாம்பியன்ஷிப்பை ஏவுகனைக் கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் லெப்டினன்ட் கமாண்டர் எம்.எம்.ஜே வீரகோன் வென்றதுடன், பயிற்சி கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை வீரரான (உடல் பயிற்சியாளர்) ஆர்.எம்.எஸ்.என். ராஜகுருவினால் இரண்டாம் இடத்தைப் பிடிக்க முடிந்தது. திறந்த கேடயம் 02 பிரிவை மேற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் லெப்டினன்ட் கமாண்டர் பி.கே குமாரகே வென்றதுடன், வட மத்திய கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் கமாண்டர் பி.ஆர்.பி.டி தயாரத்ன இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

மேலும், வளர்ந்து வரும் தடகள வீரராக மேற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரரான டி.எம்.எச் ஜீவங்க விருதுகளை வென்றதுடன், போட்டியில் ஒட்டுமொத்த ஆண்களுக்கான இரண்டாம் இடத்தை கடற்படை கட்டளையும், பெண்களுக்கான இரண்டாம் இடத்தை மேற்கு கடற்படை கட்டளையும் வென்றது.

இந்தப் போட்டியின் பரிசு வழங்கும் விழா, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா தலைமையில் 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படை ஏவுதள் கட்டளைக்கு தலைமை தாங்கும் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப், கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழுவுடன் கலந்து கொண்டனர்.