இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE GARIBALDI’ போர்க்கப்பல் தீவிலிருந்து புறப்பட்டது
விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டிற்கு வருகை தந்த இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE GARIBALDI’ போர்க்கப்பல், அத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டதன் பின்னர், இன்றைய தினம் (2026 செப்டம்பர் 12) காலை கொழும்ப துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.
மேலும், கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், அதன் கட்டளை அதிகாரியான கெப்டன் Marco GUERRIERO விற்கும் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு குறித்த கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், கப்பலின் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவதிலும் பங்கேற்றனர்.
1 /
6













