இராணுவ மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பு துவக்க விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

இராணுவ மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பின் ஆரம்ப வெளியீட்டு நிகழ்வு இன்று (2020 ஜூலை 23) ஆம் திகதி கொழும்பு இராணுவ மருத்துவமனையில் உள்ள கேட்போர் கூடத்தில்இடம்பெற்றன. இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.

முப்படையின் மருத்துவர்களுக்கு மற்றும் பல் மருத்துவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதுகலை தகுதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக முதுகலை மருத்துவ நிறுவனம் இணைந்து இந்த முதுநிலை இராணுவ மருத்துவம் திட்டத்தை ஏற்பாடு செய்தன.

இந் நிகழ்வுக்காக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர், உயர் கல்வி அமைச்சின் செயலாளர், முப்படையின் தளபதிகள் மற்றும் ஆயுதப்படைகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக முதுகலை மருத்துவ நிறுவனத்தில் இராணுவ மருத்துவத்தின் இடை-கல்வி வாரியமால் ஏற்பாடு செய்யப்பட்டன.