இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் புதிய கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி அவர்கள் 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகரும் கடற்படைத் தளபதியும் பரஸ்பர நலன்களைப் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இதற்கிடையில், இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ராயல் ஆஸ்திரேலிய கடற்படை தளபதியின் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இறையாண்மை எல்லை செயல்பாடுகள் குறித்த ஒருங்கிணைந்த பணிக்குழுவின் கட்டளை அதிகாரியின் வாழ்த்துச் செய்திகளை இங்கு உயர் ஸ்தானிகர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் கொழும்பு ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் சோன் அன்வின் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி ஆகியோருக்கு இடையே நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொள்ளப்பட்டன.