கொமாண்டர் அசங்க மனுரத்ன இலங்கை கடற்படைக் கப்பல் ரத்னதீபவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்

இலங்கை கடற்படையின் கடலோர ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் இரத்னதீபவின் புதிய கட்டளை அதிகாரியாக 2020 ஜூலை 31 அன்று கொமாண்டர் அசங்க மனுரத்ன கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, கப்பலின் முன்னால் கட்டளை அதிகாரி கமாண்டர் சமிந்த விஜேவர்தன காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து அதிகாரப்பூர்வமாக கொமாண்டர் அசங்க மனுரத்ன விடம் கடமைகளை ஒப்படைத்தார். இந்நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கமடோர் சுதத் லேல்வல கலந்து கொண்டார், மேலும் புதிய கட்டளை அதிகாரியின் பிரிவு ஆய்வுக்குப் பின்னர் பதவியேற்பு நிகழ்வு நிறைவடைந்தது.