இலங்கையின் பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு

விடை பெறவிருக்கும் இலங்கையில் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சையிட் மக்சுமுல் ஹக்கீம் அவர்கள் 2020 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சையிட் மக்சுமுல் ஹக்கீம் அவர்கள் அவரது பதவிக்காலத்தின் முடிவை முன்னிட்டு கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார். அவரது பதவிக்காலத்தில் இலங்கை கடற்படைக்கு அளித்த ஒத்துழைப்புக்காக வெளியேறும் பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகருக்கு நன்றியைத் தெரிவித்த கடற்படைத் தளபதி, அவரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு சின்னங்களை பரிமாற்றமும் நடைபெற்றது.