கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் கட்டப்பட்ட இலங்கை அமரபுர மஹா நிகாயவின் புதிய சங்க சபை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் கொழும்பு வெல்லவத்தை பகுதியில் கட்டப்பட்ட இலங்கை அமரபுர மஹா நிகாயவின் புதிய சங்க சபை அலுவலகம் பிரதமர் கெளரவ. மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2020 ஆகஸ்ட் 15 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கழந்துகொண்டார்.

இலங்கை அமரபுர மஹா நிகாயவின் சங்க சபை அலுவலக கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை கடற்படை சிவில் பொறியியல் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்பால் விரைவாக முடித்ததை நினைவுகூரும் வகையில் பரிசு வழங்கும் விழாவொன்று இந்த அலுவலக கட்டிடம் திறக்கப்படுவதற்கு முன்னர், 2020 ஆகஸ்ட் 14 ஆம் திகதி, நடைபெற்றது. குறித்த பரிசு வழங்கும் நிகழ்வு அமரபுர தாயக சபையின் துணைத் தலைவர் அஜித் டி சொய்சா தலைமையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) பியால் டி சில்வா, சிவில் பொறியியல் இயக்குநர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் கட்டப்பட்ட இலங்கை அமரபுர மஹா நிகாயவின் புதிய சங்க சபை அலுவலகம் பிரதமர் கெளரவ. மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் “சர் சிரில் டி சொய்சா” நினைவு மண்டபம் என பெயரில் 2020 ஆகஸ்ட் 15 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக இலங்கை அமரபுர மஹா நிகாயே உத்தரீதர மஹா நாயக்க அக்கமஹா பண்டித மஹோபாத்ய கொடுகொட தம்மவாச தேரர் உட்பட மஹா சங்கத்தினர்கள், அமைச்சர்கள், கடற்படைத் தளபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.