வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன

தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் காங்கேசந்துரை துறைமுக பகுதி கடற்கரை, கரைநகர் கசுரினா கடற்கரை, ஊர்காவற்துறை சட்டி மற்றும் கரப்பன் கடற்கரை, வெத்தலகேனி கடைகாடு கடற்கரை, நெடுந் தீவைச் சுற்றியுள்ள கடற்கரை, புங்குடுதீவு குரிகட்டுவான் பகுதி கடற்கரை மற்றும் பல்லிகுடா செட்டியர்குலம் மீன்பிடி துறைமுகத்திற்குள் கடற்கரை ஆகிய கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்தனர். இதேபோன்று தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களும் தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திலிருந்து காலி நகரத்திற்கு செல்லும் கடற்கரை, தங்காலை பரவிவெல்ல கடற்கரை மற்றும் ஹம்பாந்தோட்டை நகர கடற்கரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், கோவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடைமுறைகளுக்கும் ஏற்ப கரையோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் நடத்தப்பட்டன, மேலும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க கடற்படை இதுபோன்ற சூழல் நட்பு திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளும்.