இலங்கையில் உள்ள மாலத்தீவு குடியரசு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள மாலத்தீவு குடியரசு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் இஸ்மயில் நசீர் (Ismail Naseer) 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.

மாலத்தீவு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் இஸ்மயில் நசீர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்து இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களை மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்தனர். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு சின்னங்களை பரிமாற்றமும் நடைபெற்றது.