சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியை

சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2020 ஆகஸ்ட் 20 அன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகை தந்த ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் அவர்களை கடற்படை சம்பிரதாய முறைப்படி கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதுடன் இச் சந்திப்பின் போது இலங்கை சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம், இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக பதவியேற்ற கடற்படைத் தளபதியை வாழ்த்தினார்.

இங்கு இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.