இலங்கையில் உள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் இராணுவம், விமானம் மற்றும் கடற்படை ஆலோசகராக பணியாற்றும் கர்னல் டென்னிஸ் ஐ ஸ்கோடா அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2020 ஆகஸ்ட் 20 அன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது ரஷ்ய குடியரசு தூதரகத்தின் இராணுவம், விமானம் மற்றும் கடற்படை ஆலோசகர் இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக பதவியேற்ற கடற்படைத் தளபதியை வாழ்த்தினார். மேலும், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு உறவுகள் உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன