அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 362 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 240 வது நிரந்தர ஆட்சேர்ப்பின் 362 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2020 ஆகஸ்ட் 21 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு கடற்படை பணிப்பாளர் நாயகம் பயிற்சி, ரியர் அட்மிரல் ஏ.ஏ,ஆர்.கே பெரேரா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. அப்போது 240 வது ஆட்சேர்ப்பில் ஈ.ஏ.சி ரோஹித எக்ஸ்.எஸ் 118180 சிறந்த பயிட்சியாளருக்கான விருதை பெற்றார். சகல பாடங்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை பெண் கடற்படை வீரர் கே.எம்.எஸ்.கே.கே சந்திரசேகர டப்.எம் 118376 பெற்றார். கடற்படை வீரர் கே.ஆர்.ஈ.கே பெரேரா எல்.எல்.எல்.ஆர் 118342 சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் எல்.ஜி.எஸ்.டி குமார எக்ஸ்.எச் 118235 சிறந்த விளையாட்டு வீரராகவும் ஜீ.பி.எச்.பி தர்ம ஷி டப்.எச் 118385 சிறந்த விளையாட்டு விராங்கணியாகவும் விருதுகள் வென்றனர். மேலும் 240 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக “மிஹிகத” பிரிவு விருது பெற்றுள்ளது.

இந் நிகழ்வுக்காக தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி, இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் தளபதி, கடற்படை தலைமையகத்தின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளைய மாலுமிகள் மற்றும் வெளியேறி செல்லும் கடற்படையினர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.