ரியர் அட்மிரல் பிரெட் செனெவிரத்ன கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ரியர் அட்மிரல் பிரெட் செனெவிரத்ன இன்று (2020 ஆகஸ்ட் 25) 33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெட்தென்ன உட்பட பணிப்பாளர் நாயகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்களினால் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1987 ஆம் ஆண்டில் கடற்படைக்கு சேர்ந்த ரியர் அட்மிரல் பிரெட் செனெவிரத்ன, தனது பதவி காலத்தில் இயக்குநர் கடற்படை நில செயல்பாடுகள், தளபதி கடற்படை காலாட்படை போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.