இலங்கையில் துருக்கி குடியரசின் தூதர் கடற்படைத் தளபதியை சந்திப்பு

இலங்கையில் துருக்கி குடியரசின் தூதர் திருமதி ஆர். டிமெட் செகசியொக்லு இன்று (2020 செப்டெம்பர் 02 ) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, துருக்கி தூதர் இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை வாழ்த்தினார்.மேலும், துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு உறவுகள் உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.