பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி கடற்படைத் தளபதியை சந்திப்பு

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரால் பிரபாத் தெமதன்பிட்டிய இன்று (2020 செப்டெம்பர் 03) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தேமதன்பிட்டிய, பாரம்பரியமாக இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை வாழ்த்தினார். இங்கு இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.