ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல 2020 செப்டம்பர் 04 ஆம் திகதி 34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு பணிப்பாளர் நாயகர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்களினால் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் கடற்படைக்கு சேர்ந்த ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல, தனது பதவி காலத்தில் வடக்கு, வட மத்திய மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் துணைத் தளபதியாகவும், கடற்படை நல இயக்குநர், கடற்படை தகவல் தொடர்பு மற்றும் இயக்குநர் பொது சேவைகள் போன்ற மூத்த பதவிகளை வகித்துள்ளார்.