யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக கடற்படையால் மேலும் ஒரு கடல் சுற்று பயணம்

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 169 மாணவர்களுக்காக 2020 செப்டம்பர் 06 அன்று வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

கடற்படையின் திமிங்கல கண்காணிப்பு திட்டத்துக்காக பயன்படுத்தப்படும் A543 என்ற கப்பலில் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர், இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மேலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மூலம் கடல் சூழலுக்கு ஏற்படும் அழிவு குறித்து அவர்களை தெரியப்படுத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 161 மாணவர்களுக்கும் இதேபோன்ற கடல் சுற்று பயணத்தை கடற்படை வழங்கியது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பின்பற்றி கடற்படை இந்த பயணத்தை ஏற்பாடு செய்தது. இந்த சிறப்பு சந்தர்ப்பம் மாணவர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக மாறியதுடன், இலங்கை பிரதேசத்தின் கடல் வளங்கள் மற்றும் அந்த வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இது மூலம் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.