வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன

தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கோவிலன், மாவெலிதுரை, வெத்தலகேனி, காங்கேசந்துரை துறைமுகம் மற்றும் அராலி மீன்பிடி துறைமுகம் ஆகிய கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்தனர். இதேபோன்று தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களும் காலி தடெல்ல மற்றும் தங்காலை பல்லிக்குடாவ கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், கடற்படைகொடி கட்டளையின் கடற்படையினர் சாண்டி பே கடற்கரையுலிருந்து யானை துடுவ வரை ஒரு நடைப்பயணத்தை ஏற்பாடு செய்தனர். குறித்த நடைப்பயணத்தின் போது நீல-பச்சை சூழல் மண்டலத்தை பராமரிக்க உதவும் வகையில் கோரல் கோவ் கடற்கரை மற்றும் கிரீன் பே கடற்கரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

கோவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடைமுறைகளுக்கும் ஏற்ப இந்த கரையோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் நடத்தப்பட்டன, மேலும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க கடற்படை இதுபோன்ற சூழல் நட்பு திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளும்.