இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ட்ரவிஸ் கொக்ஸ் உட்பட குழுவினர் 2020 செப்டெம்பர் 09 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டதற்காக இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு உறவுகள் உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாற்றப்பட்டன.