இலங்கை கடற்படை கப்பல் ‘ரங்கல’ நிறுவனம் 53 வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘ரங்கல’ நிறுவனத்தின் 53 வது ஆண்டுவிழா 2020 செப்டம்பர் 09 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

ரங்கல நிறுவனத்தின் 53 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, நிறுவனத்தின் கட்டளை அதிகாரி உட்பட கடற்படையினர் கடற்படை மரபுகள் மற்றும் மத அனுசரிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, ஆண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, கடற்படை மரபுக்கு ஏற்ப, 2020 செப்டம்பர் 9 ஆம் திகதி காலை, கட்டளை அதிகாரி பிரிவுகள் ஆய்வு செய்த பின் கப்பல் குழுவினரை உரையாற்றினார்.

மேலும், 53 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கடற்படை பழக்கவழக்கங்களின்படி, ஒரு ஆடம்பரமான ‘பரகனா’ (பாரம்பரிய உணவு) விருந்து நடைபெற்றது.