ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக 2020 செப்டம்பர் 18 அன்று கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்

அங்கு புதிய கட்டளை தளபதியை கடற்படை மரபுகளுக்கமைய வடக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டன. மத சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், வடக்கு கடற்படை கட்டளையின் முன்னாள் தளபதியான தற்போதய கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் கபில சமரவீர, கட்டளையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்டளைத் துணைத் தளபதி, துறைத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.