75 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு மற்றும் 60 இளைய கடற்படை வீரர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 75 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான மற்றும் 60 இளைய கடற்படை வீரர்களுக்கு ரூபா 200,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 செப்டம்பர் 21) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வுக்காக 49.5 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டதுடன் கடற்படையின் நீண்ட காலமாக சேவைசெய்த மூத்த வீரர்களின் சேவை மதிப்பீடு செய்ய குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்படுகின்றன. இது வரை 3324 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு கடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், முதன்முறையாக, இந்த வட்டி இல்லாத கடன் இளைய கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டதுடன் இதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 60 இளைய கடற்படை வீரர்களுக்கு கடற்படை நிவாரண அறக்கட்டளை கடன்களை வழங்கியது. மேலும், வரும் காலகட்டத்தில், 2050 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு மற்றும் 50 இளைய கடற்படை வீரர்களுக்கு குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடத்தக்கது.