இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர், அதி மேதகு டேவிட் ஹோலி அவர்கள் 2020 செப்டம்பர் 24 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ஆஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகர் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில், நினைவுச் சின்னங்களும் அவர்களால் பரிமாறப்பட்டன.