இலங்கை கடற்படை கப்பல் 'தக்‌ஷிலா' மற்றும் 'மஹசென்' நிறுவனங்கள் தனது 13 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது.

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் 'தக்‌ஷிலா' மற்றும் 'மஹசென்' நிறுவனங்களின் 13 வது ஆண்டு நிறைவை 2020 செப்டம்பர் 28 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

இலங்கை கடற்படை கப்பல் 'தக்‌ஷிலா' மற்றும் 'மஹசென்' நிறுவனங்களின் 13 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நிறுவனங்களின் கட்டளை அதிகாரிகள் உட்பட கடற்படையினர் கடற்படை மரபுகள் மற்றும் மத அனுசரிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, ஆண்டு நிறைவை பிரமாண்டமாக கொண்டாட நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, கடற்படை மரபுகளுக்கு ஏற்ப, கட்டளை அதிகாரிகள் பிரிவுகள் ஆய்வு செய்த பின் கப்பல் குழுவினரை உரையாற்றினார்கள்.

மேலும், கடற்படை பழக்கவழக்கங்களின்படி, 'தக்‌ஷிலா' மற்றும் 'மஹசென்' நிறுவனங்களில் ஒரு ஆடம்பரமான ‘பராகானா’ (பாரம்பரிய உணவு) விருந்து நடைபெற்றது.