கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியை சந்திப்பு

இலங்கை கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்க,இன்று (2020 நவம்பர் 02) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

மேலும் ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்க இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை ஏற்றுக்கொண்டபின் முதல் முரையாக கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்து கடற்படைத் தளபதியை சந்தித்து உரையாடினார். அங்கு கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்கவுக்கு கடற்படைத் தளபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொண்டனர்.