கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவு விழாவிற்கு வெளிநாட்டு கடற்படைத் தளபதிகளின் வாழ்த்துக்கள்

2020 டிசம்பர் 09 அன்று கொண்டாடப்பட்ட இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவுக்கு, பல வெளிநாட்டு கடற்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் தளபதிகள் தங்கள் பாராட்டுக்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு அனுப்பினர்.

அதன்படி, கடற்படையின் 70 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் (Karambir Singh) மற்றும் இத்தாலி கடற்படை தளபதி அட்மிரல் குசெப் காவோ தகானோ (Giuseppe Cavo Dragone) ஆகியோர் கடற்படைக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதன் மூலம் கடல் பாதுகாப்பு தொடர்பான பொதுவான செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப சவால்களை சமாளிப்பதாக நம்புவதாகக் கூறினார்கள். இலங்கையில் ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமான பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டெனிஸ் ஐ ஸ்கோடா (Denis I. Shkoda) அவர்களும் தனது வாழ்த்து செய்திகளை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு தெரிவித்தார்.

இதற்கிடையில் அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஜே.ஸி அகுலினோகெ (J.C. Aquilino) வின் வாழ்த்து செய்தி இலங்கையில் அமெரிக்க தூதரகத்தின் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கமாண்டர் ரிச்சர்ட் லிஸ்டர் (Richard Lister) இன்று கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் வழங்கிய பின்னர், இருவரும் கலந்துரையாடலையும் நடத்தினர்.