ரியர் அட்மிரால் டி விஜேதுங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ஏறக்குறைய 34 ஆண்டுகால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் டி விஜேதுங்க இன்று (2020 டிசம்பர் 31) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர் நாயகர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் கடற்படையில் சேர்ந்த ரியர் அட்மிரல் டி விஜேதுங்க, தனது பதவி காலத்தில் கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைகளின் கொமடோர் அதிகாரி வழங்கள், கடற்படை சம்பளம் மற்றும் ஓய்வூதிய இயக்குநர், கடற்படை உள்நாட்டு கொள்முதல் இயக்குநர், கடற்படை வழங்கல் இயக்குநர், கடற்படை வரவு செலவு மற்றும் ஒருங்கிணைந்த விநியோக மேலாண்மை அமைப்பின் இயக்குநர், கடற்படை வெளிநாட்டு கொள்முதல் இயக்குநர் போன்ற முக்கிய பதவிகளை வகித்தார்.