இந்திய விமானப்படைத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பாதூரியா (Rakesh Kumar Singh Bhadauria) இன்று (2021 மார்ச் 4) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

கடற்படைத் தலைமையகத்துக்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதியை மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன அன்புடன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து கடற்படையினரால் சிறப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இந்திய விமானப்படைத் தளபதியை அன்புடன் வரவேற்று, கடற்படையின் இயக்குநர்கள் குழுவை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.

இச் சந்திப்பில் கடற்படைத் தளபதியும் இந்திய விமானப்படைத் தளபதியும் இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.