கடற்படை சேவா வனிதா பிரிவு சர்வதேச மகளிர் தினத்தை பிரமாண்டமாக கொண்டாடியது

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் மகளிர் தின கொண்டாட்டத் திட்டமொன்று பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்களிப்பில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடைபெற்றது.

‘சவால் செய்ய தேர்வு செய்வோம்’ என்ற இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தின கருப்பொருளின் கீழ் கடற்படை சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின கொண்டாட்டங்கள் மூலம் பெண் அதிகாரிகள், பெண் மாலுமிகள் மற்றும் கடற்படை மாலுமிகளுக்கு வலிமையும் ஊக்கமும் அளிக்கும் அவர்களின் மனைவிகளும் பாராட்டப்பட்டன.

மேலும், மகளிர் தின கொண்டாட்டங்களகைகு இணையாக, சேவா வனிதா பிரிவின் தலைவியின் கருத்தின் படி மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் பிரணீத் அபயசுந்தர அவர்களுடைய பிரதான பதிப்பில் பல அறிஞர்கள் முன்வைத்த பல மதிப்புமிக்க கட்டுரைகள், படைப்புகள், கலந்துரையாடல்கள் மற்றும் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட 'சிந்துலிய' பத்திரிகையின் முதல் பதிப்பை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன அவர்களால் பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன அவர்களுக்கு மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு வழங்கப்பட்டது.

மிக சிறந்த குடும்ப உறவுக்கு தெளிவான மனதை வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து மூத்த மனநல மருத்துவர் மற்றும் உளவியலாளர் திருமதி அமா திசானநாயக்கவின் விரிவுரையொன்றும், பெண்களின் சுவைக்கு ஏற்ப சிரேஷ்ட சமையல்காரர் தேசபந்து டி. பபிலிஸ் சில்வா அவர்களின் சமையல் பட்டறையொன்றும், பெண்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தின் சிரேஷ்ட அழகு நிபுணர் திருமதி சுனீதா கொதலாவலவின் அழகு கலாச்சார நிகழ்ச்சியொன்றும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட கைவினைஞர் திருமதி ஜி.டபிள்யூ ஸ்வர்ணா ஜெயந்தியின் தையல் திட்டமொன்றும் இந்த கடற்படை சேவா வனிதாமகளிர் தின கொண்டாட்டத்தில் நடைபெற்றன.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் துணைத் தலைவி திருமதி குமாரி வீரசிங்க மற்றும் சேவா வனிதா பிரிவின் சிரெஷ்ட உறுப்பினர்கள், தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, துணைத் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன, பணிப்பாளர் நாயகம் மின் மற்றும் மின் பொறியாளர் ரியர் அட்மிரல் எஸ்.வி.ஜே.என் சமரசிங்க, பணிப்பாளர் நாயகம் நபர்கள் ரியர் அட்மிரல் உபுல் த சில்வா, தளபதி தொண்டர் கடற்படை ரியர் அட்மிரல் சனத் உத்பல, பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, நிர்வாக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே, பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான, பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் சேனக செனெவிரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், மாலுமிகள் கலந்து கொண்டனர்.