ரியர் அட்மிரால் சுமித் வீரசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

36 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று (2021 மார்ச் 21) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர் நாயகர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1985 ஆம் ஆண்டில் கடற்படையில் சேர்ந்த ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, தனது பதவி காலத்தில் கடற்படை நல இயக்குநர், இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் கட்டளை அதிகாரி, தெற்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளின் துணைத் தளபதி, இயக்குனர் கடற்படை நபர்கள், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி, பணிப்பாளர் நாயகம் சேவைகள், பணிப்பாளர் நாயகம் நிர்வாகம், கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி, தன்னார்வ கடற்படையின் தளபதி, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி, கடற்படை துனை தலைமை அதிகாரி, கடற்படை தலைமை அதிகாரி ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார்.