17 வது ஆட்சேர்ப்பின் தொழில்நுட்ப பிரிவு கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர கடற்படையின் 17 வது ஆட்சேர்ப்பு தொழில்நுட்ப பிரிவின் 27 கடற்படை வீரர்கள் தனது அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து இன்று (2021 மார்ச் 23) வெலிசர, கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் இடம்பெற்ற அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் சனத் உத்பல பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிருவனத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்ற கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் குறித்த அணிவகுப்பு வைபவம் நடைபெற்றதுடன் அடிப்படை பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு தன்னார்வ கடற்படையின் தளபதி அவர்களினால் விருதுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன.

அதன் படி 17 வது ஆட்சேர்ப்பின் சிறந்த விளையாட்டு போட்டியாளருக்கான விருதை கடற்படை வீரர் பீ.எம்.எஸ் சிரிமால் பெற்றுள்ளார். சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை கடற்படை வீரர் ஐ.ஜி.கே.சாமில்க பெற்றதுடன் சிறந்த பயிட்சியாளருக்கான விருதை கடற்படை வீரர் டப்.எம்.ஜி.ஜி.ஜே.ஈ வலிசுந்தர பெற்றுள்ளார்.

வண்ணமயமான கலாச்சார நிகழ்வுகள் கொன்டுள்ள குறித்த அணிவகுப்புக்காக கடற்படை தலைமையகத்தில், மேற்கு கடற்படை கட்டளையில் மற்றும் வெலிசரா கடற்படை வளாகத்தில் மூத்த மற்றும் இளநிலை அதிகாரிகள், மாலுமிகள் கலந்துக்கொண்டனர்.