ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய இன்று (2021 ஏப்ரல் 09) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் 15 வது கேடட் ஆட்சேர்ப்பின் கேடட் அதிகாரியாக கடற்படையில் சேர்ந்த ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய, தனது பதவி காலத்தில் பல்வேறு கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியதுடன் சாம்பூர் கடற்படை பயிற்சி மையத்தின் தளபதி, இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தின் கட்டளை அதிகாரி மற்றும் பூனாவ பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி, வட மேற்கு, மேற்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளின் துணைத் தளபதி, இயக்குனர் கடற்படை நலன், தென்கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார்.