கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்ட லங்காகம நில்வெல்ல பாலம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

தெற்கு மாகாணத்தில் காலி, நெலுவ, லங்காகம மற்றும் நில்வெல்ல கிராமங்களை இணைக்கும் கடற்படையின் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட லங்காகம நில்வெல்ல பாலம் தெற்கு மாகாண ஆளுநர் கலாநிதி சிலி கமகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னயின் பங்கேற்புடன் 2021 ஏப்ரல் 10 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

நெலுவ, லங்காகம மற்றும் நில்வெல்ல கிராம மக்கள் நீண்ட காலமாக கின் நதியைக் கடக்கும்போது கஷ்டங்களை எதிர்கொண்டதால் அவர்களின் நீண்டகால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'செழிப்பு பார்வை' கருத்தின் படி மிகவும் பாதுகாப்பான மற்றும் வசதியான முறையில் இந்த லங்காகம நில்வெல்ல பாலம் கட்டப்பட்டது. இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் தெற்கு மாகாண சபையின் ஏற்பாடுகளுடன் சாலை மேம்பாட்டு ஆணையத்தின் திட்டத்துடன் 2020 ஜூலை 28 ஆம் திகதி இந்த பாலத்தின் கட்டுமானம் கடற்படையால் தொடங்கப்பட்டதுடன் இன்று பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ள லங்காகம நில்வெல்ல பாலம் 84 மீட்டர் நீளமும் 1.8 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

கின் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட லங்காகம மற்றும் நில்வெல்ல கிராமங்களை இணைக்கும் புதிய பாலம், கிராமவாசிகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் உத்தியோகபூர்வ தேவைகளுக்கான அணுகலை முன்பை விட எளிதாக்கும்.

புதிய பாலம் திறப்பு விழாவில் மக்கள் பிரதிநிதிகள், தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா, புகழ்பெற்ற அழைப்பாளர்கள், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கலந்து கொண்டனர்.