ரியர் அட்மிரல் நிஷாந்த சமரசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் நிஷாந்த சமரசிங்க இன்று (2021 ஏப்ரல் 12) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறம் இருந்து மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் 14 வது கேடட் ஆட்சேர்ப்பின் கேடட் அதிகாரியாக கடற்படையில் சேர்ந்த ரியர் அட்மிரல் நிஷாந்த சமரசிங்க, தனது பதவி காலத்தில் இயக்குநர் கடற்படை மின் மற்றும் மின் பொறியியல் (எரிசக்தி மற்றும் பயன்பாடுகள்), இயக்குநர் கடற்படை மின் மற்றும் மின் பொறியியல் (அமைப்புகள்), கமடோர் மின் மற்றும் மின் பொறியியல் துறை (மேற்கு), இயக்குநர் கடற்படை மின் மற்றும் மின் பொறியியல் (வெளியீடு, ஆயுதங்கள் மற்றும் மின் மற்றும் மின்சார), பணிப்பாளர் மின் மற்றும் மின் பொறியாளர் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார்.