ரியர் அட்மிரல் சஜித் கமகே கடற்படை வெளியீட்டு கட்டளையின் புதிய கொடி அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

கடற்படை வெளியீட்டு கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சஜித் கமகே 2021 ஏப்ரல் 30 ஆம் திகதி கடற்படை வெளியீட்டு கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, வெளியீட்டு கட்டளையின் கொடி அதிகாரியாக பணியாற்றிய ரியர் அட்மிரல் பண்டார ஜெயதிலக, திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் உள்ள கடற்படை வெளியீட்டு கட்டளை அலுவலகத்தில் வைத்து ரியர் அட்மிரல் சஜித் கமகேவிடம் கடமைகளை ஒப்படைத்தார். கடற்படை வெளியீட்டு கட்டளையின் கொடி அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, ரியர் அட்மிரல் சஜித் கமகே கடற்படை விளையாட்டு இயக்குநராக பணியாற்றினார்.

கடற்படை வெளியீட்டு கட்டளையின் புதிய கொடி அதிகாரியை பாரம்பரிய கடற்படை வணக்கத்துடன் கடற்படை வெளியீட்டு கட்டளைக்கு வரவேற்கப்பட்டதுடன் குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் பண்டார ஜெயதிலகவுக்கு கடற்படை அதிகாரிகள் தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து பாரம்பரிய கடற்படை வணக்கத்துடன் விடைபெற்றனர்.