ரியர் அட்மிரல் பண்டார ஜெயதிலக கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் பண்டார ஜயதிலக இன்று (2021 மே12) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1987 ஆம் ஆண்டில் சர் ஜான் கொதலாவல பாதுகாப்பு அறிவியல் பீடத்தில் 05 வது ஆட்சேர்ப்பின் அதிகாரியாக கடற்படையில் சேர்ந்த ரியர் அட்மிரல் பண்டார ஜெயதிலக, தனது பதவிக் காலத்தில் பல்வேறு கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார். துணை இயக்குநர் கடற்படை பணியாளர்கள் மற்றும் மனித வள மேலாளர், கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு), இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தின் தளபதி, இயக்குநர் கடற்படை நிர்வாகம், துனை பணிப்பாளர் நாயகம் நிர்வாகம், வடமேற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி, இலங்கை கடலோர காவல்படையின் துணை பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்படை வெளியீட்டு கட்டளையின் கொடி அதிகாரி ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார்.