ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி இன்று (2021 மே 20) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் கடற்படையில் சேர்ந்த ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி, தனது பதவிக் காலத்தில் சிரெஷ்ட அதிகாரி உள்துறை தணிக்கை, துணை இயக்குநர் கடற்படை வழங்கள், துணை இயக்குநர் கடற்படை வெளிநாட்டு கொள்முதல், துணை இயக்குநர் உள்ளூர் கொள்முதல், கேப்டன் வழங்கள் மற்றும் சேவைகள் மேற்கு மற்றும் வடக்கு, இயக்குநர் கடற்படை வரவு செலவு, இயக்குனர் கடற்படை உணவு மற்றும் சீருடைகள், இயக்குநர் கடற்படை செயலாளர், இயக்குநர் கடற்படை நிர்வாகம், இயக்குநர் விளையாட்டு, கொமடோர் அதிகாரி வழங்கள் மற்றும் சேவைகள் கிழக்கு, கடற்படை செயலாளர், இயக்குநர் கடற்படை வெளிநாட்டு கொள்முதல், கடற்படை தளபதியின் செயலாளர், பணிப்பாளர் நாயகம் கடற்படை வரவு செலவு மற்றும் நிதி , பணிப்பாளர் நாயகம் வழங்கள் மற்றும் சேவைகள் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார்.