நயினாதீவு பண்டைய ரஜமஹ விஹாரயத்தில் புதிய புத்தர் சிலைக்கு புதையல் வைக்கப்பட்டன

நயினாதீவு பண்டைய ரஜமஹ விஹாரயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலைக்கு புதையல் வைக்கும் விழா இன்று (2021 மே 26) வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் இடம்பெற்றது.

நயினாதீவு ரஜமஹ விஹாரயத்தின் தளபதி, வடக்கு இலங்கையின் தலைமை சங்கநாயக்க வண, நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயகத் தேரரின் அறிவுறுத்தப்பட்டபடி கடற்படை கட்டிடக் கலைஞர்கள் பங்களிப்பால் இந்த புதிய புத்தர் சிலையின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, இன்று (2021 மே 26) ஈடுபட்ட வெசக் போய தினத்தை முன்னிட்டு இந்த சாய்ந்த புத்தர் சிலைக்கு புதையல் வைக்கும் நிகழ்வு வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தெரண ஊடக வலையமைப்பில் 'மனுசத் தெரண' திட்டத்தின் கீழ் நயினாதீவு பிரதேச வைத்திசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களையும் இன்று வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளுக்காக நயினாதீவு ரஜமஹ விஹாரயத்தின் தளபதி, வடக்கு இலங்கையின் தலைமை சங்கநாயக்க வண, நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயகத் தேரர் உட்பட வணக்கத்திற்குரிய தேரர்கள், இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்தின் கட்டளை அதிகாரி உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.