தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா கடமையேற்பு

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா இன்று (ஜூன் 14, 2021) இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்ட பின் கடற்படைத் தலைமைகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

அங்கு கடற்படை மரபுகளுக்கமைய ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவை தன்னார்வ கடற்படை தலைமையகத்திக்கு வரவேற்கப்பட்டதுடன் தன்னார்வ கடற்படையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் சனத் உத்பல தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவுக்கு கடமைகளை ஒப்படைத்தார்.இதைத் தொடர்ந்து இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதி மற்றும் கடற்படைத் தளபதி இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

மேலும், இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதி பதவிக்கு கூடுதலாக, ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா மேற்கு கடற்படைத் தளபதியாகவும் தொடர்ந்து பணியாற்றுவார்.