ரியர் அட்மிரல் அசோக விஜேசிறிவர்தன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் அசோக விஜேசிறிவர்தன இன்று (2021 நவம்பர் 19) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1988 ஆம் ஆண்டில் 18 வது கேடட் ஆட்சேர்ப்பின் கேடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் அசோக விஜேசிறிவர்தன, தனது பதவிக் காலத்தில் பல்வேறு கப்பல்கள், நிறுவனங்கள் மற்றும் கடற்படையின் 4 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். மேலும், இவர், பதில் விநாயகாதிபதி, பதில் கட்டளைத் தளபதி பூனாவ, கடற்படை பொறுப்பற்ற அதிகாரி மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு அதிகாரி ஹம்பாந்தோட்டை, கடற்படை சோதனை பிரிவின் பணிப்பாளர் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார்.