ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக இன்று (2021 நவம்பர் 09) கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டதுடன் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் முன்னால் தளபதி கொமடோர் அசங்க ரணசூரிய தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து நியமனம் தொடர்பான கடமைகளையும் பொறுப்புகளையும் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

மேலும், தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர், ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் திட்டங்கள் மற்றும் திட்டமிடலுக்கான பணிப்பாளராக கடமையாற்றினார்.