தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன கடமையேற்பு

தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன 2022 ஜனவரி 03 ஆம் திகதி இலங்கை தொண்டர் கடற்படை தலைமையகத்தில் வைத்து கடமைகளை தொடங்கினார்.

அங்கு கடற்படை மரபுகளுக்கமைய ரியர் அட்மிரல் சேனக செனவிரத்னவை தொண்டர் கடற்படை தலைமையகத்திக்கு வரவேற்கப்பட்டதுடன் தொண்டர் கடற்படையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் உபுல் த சில்வா தொண்டர் கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் சேனக செனவிரத்னக்கு ஒப்படைத்துள்ளார்.