இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த முகாம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (2022 ஜனவரி 20) வெலிசர இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் இடம்பெற்றது.

கடந்த ஜனவரி 02 ஆம் திகதி தொடங்கிய இப் பயிற்சி முகாம் தொண்டர் கடற்படையினரின் தொழில் திறன் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு ஒரு காரனமாக அமைந்துள்ளது. கடற்படைத் தளபதியின் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் வணக்கம் ஊர்வழத்தலும் கொன்ட இவ் விழா வர்ணமான இசைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் கொன்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

இங்கு கருத்துகள் தெரிவித்த கடற்படைத் தளபதி, 1952 ஜனவரி 09 ஆம் திகதி 24 அதிகாரிகள் மற்றும் 121 கடற்படையினர்களுடன் தொடங்கிய இலங்கை தொண்டர் கடற்படை தேசிய, அவசர நிலைமைகள் மற்றும் பேரழிவுகளின் போது நிபுணர் அறிவையும், பணியாளர்களையும் எப்போதும் வழங்க தயாராக உள்ள படையனியாகும் என்றும். மேலும் ஒதுக்கப்பட்ட பணிகளை செய்வதுக்கு நிரந்தர கடற்டபைடைப் பிரிவுக்கு தேவையான ஆதரவு வழங்குகின்ற பிரதான படயணியாகும் என்றும் கூறினார்.

இலங்கை கடற்படையின் ஆரம்பம் தொண்டர் கடற்படை என்றும், கடந்த காலத்துக்கு மேல் இன்று தொண்டர் கடற்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை தமது தாய்நாட்டுக்கு நிறைவேற்றி இருப்பதாகவும் கூறினார். மேலும், தனது தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாத்து நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக பங்களித்து விளையாட்டு திறன்கள் முன்னெடுத்து தேசிய மற்றும் சர்வதேசமாக அவரது திறமைகளை காட்டும் சுயேட்சை கடற்படையினர்களால் இந்த நாட்டுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை பற்றி தனது மகிழ்ச்சி மற்றும் பாராட்டை தெரிவித்தார்.

கடற்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள சவாலான அபிவிருத்தி செயல்களை நிறைவேற்றுவதில் நிரந்தர கடற்படையுடன் இணைந்து தொண்டர் கடற்படை ஆற்றிய செயலூக்கமான பங்களிப்பையும், கோவிட் 19 தொற்றுநோய் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான அவர்களின் பங்களிப்பையும் கடற்படைத் தளபதி இங்கு பாராட்டினார். கடற்படைக்கு மற்றும் நாட்டுக்கு விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச சாதனைகளை கொண்டு சேர்ப்பதில் கடற்படையின் தொண்டர் படையணி முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பதை நினைவுகூர்ந்த கடற்படைத் தளபதி, இந்த வருடாந்த பயிற்சி முகாம், சிவில் சமூகத்தின் அனுபவம் மற்றும் மதிப்பு அமைப்புகளிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளை கடற்படையின் பாத்திரத்தில் பயன்படுத்துவதற்கும், கடற்படையின் நெறிமுறைகள் மற்றும் மரபுகளின் அடையாளத்தைப் பற்றிய நடைமுறை பயிற்சி மற்றும் புரிதலை வளர்ப்பதற்கும் ஒழுக்கமான மற்றும் திறமையான மாலுமியை உருவாக்குவதற்கு கருவியாக இருக்கும் என்று கூறினார்.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க நடைபெற்ற இந் நிகழ்வுக்காக கடற்படையின் பிரதானி ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன, கடற்படை பிரதிப் பிரதானி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா, தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன, கடற்படை அதிகாரிகள், தொண்டர் கடற்படையின் கட்டளை அதிகாரி, கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.