வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்.

வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க இன்று (2022 மார்ச் 08) தலைமன்னாரில் உள்ள கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றினார். கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி புதிய தளபதியை வட மத்திய கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டதுடன் வட மத்திய கடற்படை கட்டளையின் முன்னால் தளபதியான ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன கட்டளை தலைமையகத்தில் வைத்து நியமனம் தொடர்பான கடமைகளையும் பொறுப்புகளையும் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.

குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவுக்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து பாரம்பரிய மரியாதை செலுத்தி விடைபெற்றனர்.