கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன இன்று (2022 மார்ச் 08) திருகோணமலையில் உள்ள கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றினார். கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி புதிய தளபதியை கிழக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டதுடன் கிழக்கு கடற்படை கட்டளையின் முன்னால் தளபதியான ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் கட்டளை தலைமையகத்தில் வைத்து நியமனம் தொடர்பான கடமைகளையும் பொறுப்புகளையும் ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்னவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.

குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் அவர்களுக்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து பாரம்பரிய மரியாதை செலுத்தி விடைபெற்றனர்.