ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் இன்று (2022 மார்ச் 09) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1987 ஆம் ஆண்டில் 16 வது கேடட் ஆட்சேர்ப்பின் கேடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ், தனது பதவிக் காலத்தில் பல்வேறு கப்பல்களில் மற்றும் நிறுவனங்களில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார். அவர் கடற் ஆயுதங்கள் அதிகாரி, 4 வது துரித தாக்குதல் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி, அரசாங்க வணிக வெடிபொருள் துப்பாக்கிகள் கொள்முதல் பிரிவு (CEFAP) இயக்குனர். திருகோணமலை தெற்கு கடற்படை கட்டளை அதிகாரி, பிரதித் தளபதி தெற்கு கடற்படை கட்டளை மற்றும் இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தின் தளபதி, காலி துறைமுக வசதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரி, , வெலிசர கடற்படை வளாகத்தின் கடற்படை கட்டளை அதிகாரி, பணிப்பாளர் விளையாட்டு, பணிப்பாளர் கடற்படை நடவடிக்கைகள், பணிப்பாளர் கடற்படை வெளிநாட்டு உறவுகள், பணிப்பாளர் கடல்சார் சிறப்புப் படைகள், இயக்குநர் கடற்படை கடல்சார் கண்காணிப்பு, சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி, பணிப்பாளர் நாயகம் கடற்படை ஆயுதங்கள், பிரதித் தளபதி கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் திருகோணமலை துறைமுக வசதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரி, வட மத்திய மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார்.