ஈரானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கர்ணல் ஹோமயோன் அலியாரி (Colonel Homayoun Aliyari) இன்று (2022 மார்ச் 14) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

கடற்படைத் தளபதி மற்றும் இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஹோமயோன் அலியாரிக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும், இதன் போது கடற்படைத் தளபதி மற்றும் ஈரான் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் இலங்கை தொடர்பான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் பறிமாறிக் கொண்டனர்.

மேலும், இந் நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொண்டனர்.