கென்யா பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கென்யா பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் எல் பி வஃபுலா அவர்கள் (Colonel L P WAFULA) இன்று (2022 மார்ச் 21) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இவர் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள கென்யா தூதரகத்தில் இலங்கைக்கான கென்யா பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுகிறார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும். இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.